அறநிலைய துறையில் 132 பேர் விரைவில், 'சஸ்பெண்ட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 14, 2019

அறநிலைய துறையில் 132 பேர் விரைவில், 'சஸ்பெண்ட்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கோவில் நிலம் மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், 132 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழக அரசின், ஹிந்து அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு, பல லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது; 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. நிலங்களை குத்தகைக்கு விடுவதிலும், வீடுகளை வாடகைக்கு விடுவதிலும், முறைகேடுகள் நடந்து இருப்பதாக, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனருக்கு புகார்கள் சென்றுள்ளன.இது குறித்து விசாரிக்க, குழு அமைக்கப்பட்டு இருந்தது. விசாரணை அறிக்கையை, கமிஷனரிடம் குழுவினர் தாக்கல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
அதில், 'இளநிலை உதவியாளர் முதல் இணை கமிஷனர்கள் வரை, 132 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்; அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்' என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'எனவே, 132 பேரும் விரைவில், சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாகவும், கோப்புகள் தயாராகி வருவதாகவும், அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இணை கமிஷனர் பாரதி உட்பட, மூன்று அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews