👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ்த்துறையில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கல்லூரி நிர்வாகம் பலமுறை கண்டித்தும் தங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளாத இந்த மாணவர்கள், அண்மையில் நடைபெற்ற தேர்வுக்கு அடையாள அட்டையை அணியாமல் வந்துள்ளனர். இதனால் ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
ஆசிரியர்களை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு எலிமருந்தை வாங்கி வந்த மாணவர்கள் அதனை அவர்கள் முன்னிலையிலேயே தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். மேலும் ஆசிரியர்களை மிரட்டும் நோக்கில் எலிமருந்து கலந்த தண்ணீர் குடிப்பதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் அவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் என 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணித்து தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்
