கூடுதல் விவரங்கள் கேட்கும் புதிய வருமானவரி படிவம் வெளியீடு : விவசாய வருவாய்க்கு கிடுக்கிப்பிடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

கூடுதல் விவரங்கள் கேட்கும் புதிய வருமானவரி படிவம் வெளியீடு : விவசாய வருவாய்க்கு கிடுக்கிப்பிடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய அரசு புதிய வருமானவரி கணக்கு தாக்கல் படிவத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் முக்கிய மாற்றமாக 80 வயதுக்கும மேற்பட்டவர்கள் மட்டுமே, பேப்பர் ஆவணங்கள் மூலம் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். சம்பளம், ஓய்வூதியம், வீடு, வட்டி வருவாய், வேளாண் வருவாய் ஆகியவை மூலம் ரூ.50 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர்-1 அல்லது சாகஜ் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். சம்பளம் பெறுபவர்கள் வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி கட்டணம், விடுப்பு பயணம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். முன்பு வரிவிதிப்பு படிகள் பற்றிய விவரங்களை வருமான வரித்துறை கேட்டது. தற்போது, வரிவிலக்கு படிகளுக்கு மாறியுள்ளது. விவசாய வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமானால், விவசாய நிலத்தின் அளவு, முகவரி, நீர்பாசன விவரங்களை தற்போது புதிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
வருமானம் பற்றி தகவல்களை தானியங்கி முறையில் மதிப்பீடு செய்யும் வகையில் கூடுதல் விவரங்களுக்காக பல மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் அதன் விவரங்கள் தெரிவிக்க வேண்டும். நாடுகள் இடையேயான வரி ஒப்பந்தம் மூலம் நிவாரணம் கோரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் வரி அடையாள எண், வெளிநாடுகளில் பெற்ற வரி சான்றிதழ் விவரங்களை வருமானவரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். பிரதமர் நிவாரண நிதி அல்லது தகுதியான பார்வையற்றோர் பள்ளி ஆகியவற்றுக்கு அளிக்கும் ரொக்கமில்லா நன்கொடைகளுக்கு வரிச்சலுகை பெற விரும்பினால் அதன் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews