அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பல்கலைக் கழகங்கள் முக்கியத்துவம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பல்கலைக் கழகங்கள் முக்கியத்துவம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பல்கலைக் கழகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா

நாட்டின் வளர்ச்சி கல்வியையும், தொழில் துறையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகங்கள் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தெரிவித்தார்.

விஐடி பல்கலைக்கழக தினம், விளையாட்டு விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கல்வி, விளையாட்டு உதவித்தொகை, சான்றிதழ்கள் வழங்கிப் பேசியது:
ஆசிரியர்களின் பணி, அர்ப்பணிப்புடன் கூடியது. மாணவர்களுக்கு ஒளிவிளக்காகவும், வழிகாட்டியாகவும் இருந்து எதிர்கால நாட்டை உருவாக்கும் ஆசிரியர்களை போற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சி கல்வி, தொழில்துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொழில்துறை உற்பத்தியைச் சார்ந்தது. உற்பத்திக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்.
தற்போது அறிவியல் தொழில்நுட்பம் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை அறிய வேண்டும். உலகில் முதல் கார் உருவாக 160 ஆண்டுகள் ஆனது. ஆனால், தற்போது நாள்தோறும் விதவிதமான கார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது புதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியாகும். அத்தகைய அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு விஐடி பல்கலைக்கழகம் அளித்து வரும் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுகள் மைய இயக்குநர் இ.நடராஜன் பேசுகையில், சமூக மாற்றங்களுக்கான பொறுப்பு பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது.
அந்த வகையில் விஐடி பல்கலைக்கழகம் சமூகப் பொறுப்புடைய பல்கலைக்கழகமாக விளங்கி வருவது பாராட்டுக்குரியது. நாட்டில் குடிநீர், மின்உற்பத்தி முக்கியமானது. குடிநீர் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மையைப் பயன்படுத்தி எரிசக்தி உற்பத்திக்கான புதிய பாடத் திட்டங்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
இந்த விழாவில் விஐடியில் பயிலும் 2142 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாகவும், விளையாட்டு ஊக்கத் தொகையாகவும் ரூ.90 லட்சம் வழங்கப்படுகிறது. இதேபோல், விஐடி மாணவ, மாணவிகள் கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், விளையாட்டிலும் சிறந்து விளங்க இந்த ஆண்டு ரூ.16 கோடி வழங்கப்பட உள்ளது.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது விஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் ரூ.1 கோடியும், தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் பாதிப்பின்போது ரூ.1.25 கோடியும் நிவாரணம் வழங்கப்பட்டது.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியும், சுகாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இந்த துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே அந்த நாடுகளை வளர்ந்த நாடுகளாக மாறியுள்ளன என்றார் அவர்.
விழாவில், பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்ட பி.டெக் இறுதியாண்டு மாணவர் வி.சஞ்சய், முதுநிலை பொறியியல் மாணவி வி.எஸ்.அமலா காவியா ஆகியோருக்கு வேந்தரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews