👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இந்தியாவிலேயே அறிவியல் பொறியியல் கல்வியில் அதிக மாணவர்கள் உயர்கல்விக்கு வருவது தமிழகத்தில் தான் என்று சந்திராயன் திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே கேப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், அறிவியல் பொறியியல் கல்வியில் இந்தியாவில் அதிகம் மாணவர்கள் உயர் கல்விக்கு வரும் மாநிலம் தமிழகம் தான் என்றார்.
விண்வெளித்துறையில் இந்தியா தன் தேவையை நிறைவேற்றி உள்ளது மட்டுமின்றிபுதிதாக வளர்ச்சி அடையும் நாடுகளின் தேவைகளையும் நிறைவு செய்து வருகிறது. இது விண்வெளித்துறையில் இந்தியா பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U