👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 1-ம்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் கலந்தாய்வு நிறைவடைந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கதிர்வேலுவிடம் கேட்ட போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரே, தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது. அரசுசாரா டாக்டர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சென்றுவிடுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தததும், தமிழகத்தில் கலந்தாய்வு முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கிவிட்டது. அதனால், கலந்தாய்வில் அரசு டாக்டர்களைவிட, அரசுசாரா டாக்டர்கள் அதிக இடங்களை பெற்றுள்ளனர்” என்றனர்.
இதுதொடர்பாக அரசுசாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் கூறும்போது, “அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் கட்ட கலந் தாய்வு முடிந்து, தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்க வேண்டும். இதுதான் சரியானது. ஆனால், கடந்த ஆண்டுகளில் அதுபோல் நடைபெறவில்லை. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகே, தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும். அதனால், அரசுசாரா டாக்டர் களால் தமிழகத்தில் அதிக இடங்களை எடுக்க முடியவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் கலந்தாய்வு நியாயமாக நடந்தது. அரசுசாரா டாக்டர்களும் அதிக இடங்களை பிடிக்க முடிந்தது” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்