மாற்றத்தை எதிர்நோக்கி... முதல் ‘மை’வைக்கும் 8.98 லட்சம் பேர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 18, 2019

மாற்றத்தை எதிர்நோக்கி... முதல் ‘மை’வைக்கும் 8.98 லட்சம் பேர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 5.91 கோடி வாக்காளர்கள் தங்களின் விரலில் “மை”யிட்டு தங்களை ஆளும் அரசை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8.98 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆகும். இதைத் தவிர்த்து 20 முதல் 29 வயதிற்குள் 1.18 கோடி வாக்காளர்களும், 30 முதல் 39 வயதிற்குள் 1.38 கோடி வாக்காளர்களும், 40 முதல் 49 1.27 கோடி வாக்காளர்களும், 50 முதல் 59 வயதிற்குள் 95.86 லட்சம் வாக்காளர்களும், 60 முதல் 69 வயதிற்குள் 61.22 வாக்காளர்களும், 70 முதல் 79 வயதிற்குள் 30.53 லட்சம் வாக்காளர்களும், 80 வயதிற்குள் மேல் 10.12 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
இவர்களில் 8.90 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களுடன் சேர்த்து 40 வயதிற்குப்பட்ட 2.5 கோடி பேர் மாற்றத்தை நோக்கி தங்களது பதிவு செய்ய உள்ளனர். எனவே இவர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வகைகளில் பிரசாரங்களில் ஈடுபட்டனர். இளைஞர்கள் அனைவரையும் வாக்குச்சாவடியை நோக்கி வரவழைக்க தேர்தல் ஆணையமும் சமூக வலைதள பிரசாரங்களில் ஈடுபட்டது. இதைத் தவிர்த்து ஓட்டின் வாழ்வுதனை நோட்டு கவ்வும் ஓட்டே மீண்டும் வெல்லும், என் ‘மை’ என் உரி‘மை’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தின. இந்நிலையில் வெற்றி தீர்மானிக்க கூடிய 40 வயதிக்கு உட்பட்ட 2.5 கோடி பேர் இன்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். அவர்களின் கை விரலில் இன்று வைக்கப்படும் ‘மை’ கறை யாருக்கு நல்லது, யாருக்கு கெட்டது என்பது மே 23ம் தேதி தெரியவரும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews