1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறைஅமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை தொடங்கியது.
இதற்கு ஆசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு தனது முடிவில் பின் வாங்கியது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 6, 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதன் நிர்வாகங்கள் நிறுத்தி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன. சமீபத்தில் சென்னையில் தனியார் மழலையர் பள்ளியில் எல்கேஜி படித்த மாணவியின் தேர்ச்சியை நிறுத்தி வைத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்விளைவுகளுக்கு பொறுப்புஇதைத் தவிர்க்க தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைக் கட்டாயத் தேர்ச்சி செய்யாவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு பள்ளிகளே பொறுப்பேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்துவித பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில்பயிலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிட வேண்டும். அதேநேரம் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைத் தளர்த்தி தேர்ச்சி அளிக்க முதன்மைக் கல்வி அதிகாரியின் சிறப்புஅனுமதி பெறுவது அவசியம். மேலும், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் குழு: இதற்கிடையே 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 6, 7, 8 ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகளை கல்வித்துறையின் அதிகாரி களின் ஒப்புதலை பெற்று மே மாதம் 2ம் தேதி வெளியிட வேண்டும்:மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை தோல்வி அடையச் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து வகை பள்ளிகளிலும் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் சமூக நலத்துறை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை விதிமுறைகளை பின்பற்றி வெளியிட வேண்டும். தேர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிகளை தளர்வு செய்தால் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் மட்டுமே மதிப்பெண் பதிவேடு மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகலை அளிக்க வேண்டும்.
அரசு, அரசு நிதியுதவி பெறும் சென்னைப் பள்ளிகள், ஆதிதிராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகளை மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதலை பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். மேற்கண்ட பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும். இல்லை என்றால் பின்னால் வரும் விளைவுகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் முழு பொறுப்பேற்க வேண்டும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கல்வித்துறையின் அதிகாரி களின் ஒப்புதலை பெற்று மே மாதம் 2ம் தேதி வெளியிட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பல தனியார் பள்ளிகள் மேற்கண்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை பெயிலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு தனியார் பள்ளியில் படித்த எல்கேஜி குழந்தையை பெயிலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews