👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில் அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரியில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரியளவில் சாதனை புரிந்துள்ளனர். இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில் அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது, தமிழகம் மற்றும் புதுவை முழுக்க மொத்தம் 4816 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மொத்தம் 4395 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தங்களது விடா முயற்சி மூலமும், நம்பிக்கை மூலமும் இவர்கள் தங்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதித்து இருக்கிறார்கள். இதில் பலர் தனித்தேர்வர்களாக இந்த தேர்வை எதிர்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் மொத்தம் 152 கைதிகள் இந்த 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். சென்ட்ரல் ஜெயில், பாளையங்கோட்டை ஜெயில், புழல் ஜெயில், சேலம் ஜெயில், சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 152 பேர் தேர்வை எழுதியிருந்தனர். இந்த கைதிகளில் 110 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 40 பேர் 65 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U