தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெரும் பள்ளிகளை பணியாற்றிவரும் சுமார் 1500 ஆசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு 2009-ம் ஆண்டு அமல்படுத்திய அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
2010-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்பதால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என காலகெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த காலகெடு பின்னர் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுஇந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இந்தச் செயலுக்கு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U