👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், தேர்வெழுதிய 110 சிறைக்கைதிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது, அரசுத் தேர்வு இயக்ககம். இதில், ஒட்டுமொத்தமாக 95.2 சதவீத மாணவ,மாணவியர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 94.50 சதவீத தேர்ச்சியை விடவும் 0.70 அதிகமாகும். இதில், அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.48 சதவீதமாக உள்ளது.
பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய மாணவ,மாணவியரைத் தவிர, தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து கைதிகள் 152 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 110 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
தேர்வில் தவறிய மாணவ,மாணவியர்களுக்கு வரும் ஜூன் 14 முதல் 22 வரை சிறப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U