ஆட்சி அமைக்க போவது யார்?: ஓர் அலசல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 11, 2019

ஆட்சி அமைக்க போவது யார்?: ஓர் அலசல்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நாடு முழுவதும் ஏப்.,11 துவங்கி மே 19 வரை லோக்சபா தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 வெளியிடப்படும் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இதனையடுத்து அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம் மற்றும் எதிர்ப்பை தாண்டி 2வது முறையாக மோடி பிரதமர் ஆவாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. காங்., தலைவர் ராகுலுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கப் போகிறது. இந்த தேர்தலில் கட்சிகளின் பலம், பலவீனம், வாய்ப்புக்கள், சவால்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் விபரம்:
தேசிய ஜனநாயக கூட்டணி : பலம்: பிரதமர் மோடி திடமான தலைவராக விளங்குவது தேஜ., கூட்டணிக்கு பெரும் பலம். சமீபத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்.,ல் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய துணிவான சர்ஜிக்கல் ஸ்டிரைக் மோடியின் தலைமைக்கு கூடுதல் பலம். ஏழைகளுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், அமித்ஷாவின் வியூகங்களும் பா.ஜ.,வின் பலம்.
பலவீனம் : உ.பி., மற்றும் கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் மற்றும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிகள் பா.ஜ.,விற்கு சவாலாக இருக்கும். விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு, ஜிஎஸ்டி.,யால் ஏற்பட்ட பிரச்னைகள், சிறுபான்மையினர் எதிர்ப்பு உள்ளிட்டவை பலவீனமான விஷயங்களாக பார்க்கப்படுகிறது. வாய்ப்புக்கள் : தேசிய பிரச்னைகளில் பா.ஜ., அரசு கொண்டு வந்த 7 சதவீத வளர்ச்சி, வரி சீர்திருத்தங்கள், நலத்திட்டங்கள், தங்களுக்கு எதிரான மம்தா போன்ற மாநில முதல்வர்கள், ராகுல் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களை கையாளும் முறை, நிலையான ஆட்சியை கொடுத்தது உள்ளிட்டவை பா.ஜ.,விற்கு தங்களின் சாதனைகளாக கூறி ஓட்டு கேட்க வாய்ப்புள்ளது. சவால்கள்: தேர்தல் பிரசார சவால்களை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொறுப்பும் மோடியின் முன் உள்ளது. 2014 தேர்தலை விட பா.ஜ.,விற்கு இந்த தேர்தல் புதிய களத்தை ஏற்படுத்தி தராது. மாறாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர்., காங், பிஜூ ஜனதா தளம் போன்ற நடுநிலை கட்சிகள் யார் பக்கம் செல்கின்றன என்பதை பொறுத்தே பா.ஜ.,விற்கு எதிரான பட்டியலில் உள்ளவர்கள் யார் என்பது தீர்மானமாகும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி : பலம் : பா.ஜ.,வுக்கு எதிராக சமீப காலமாக காங்., முன்னெடுத்த பிரசாரங்கள், ராகுல் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளது ஆகியன காங்.,கின் பலமாக பார்க்கப்படுகிறது. ராகுல் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியில் தன்னை இணைத்து கொள்ள முயற்சி எடுப்பதும் மற்றொரு பலம். பலவீனம் : ரபேல், விவசாயிகள் பிரச்னை, சகிப்புத்தன்மையின்மை, வேலை வாய்ப்பு, தற்போது பாக்., மீதான விமானப்படை தாக்குதலை கேள்வி கேட்டு வருவது, பா.ஜ.,வை தொடர்ந்து எதிர்ப்பது என எதிர்மறை பிரசாரத்தை காங்., மேற்கொண்டது அக்கட்சியின் பலவீனம். காங்., ஆட்சியில் நடந்த ஊழல்கள், மோடி மீது 2014 தேர்தலின் போது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறியது காங்.,ன் பெரிய பலவீனம். வாய்ப்புக்கள்: மத்திய அரசின் பல நலத்திட்டங்கள் இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளதால் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகளை அளிக்கலாம். பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரே அக்கட்சிக்கு எதிராக பேசி வருவதும் காங்.,கிற்கு கூடுதலாக பா.ஜ., எதிர்ப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சவால்கள் : பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக மோடி எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் அரசு மீதான செல்வாக்கை அதிகப்படுத்தி உள்ளது. காங்.,கிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவு. காங்., பிரியங்காவை முன்னிலைப்படுத்தி செல்வாக்கை உயர்த்த நினைத்தாலும், அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர் மீதான வழக்குகள் சரிவாக அமைகின்றன. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்., சேர்த்துக் கொள்ளப்படாதது பலவீனமாக அமைந்துள்ளது.
மூன்றாவது அணி : பலம் : திரிணாமுல் காங், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்., ஆகியன தங்களின் மாநிலங்களில் பலமான கட்சிகளாக உள்ளன பல மாநிலங்களில் காங்.,ஐ விட பா.ஜ.,விற்கே சவாலாக அமையும். பெரிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜ.,வும் - காங்.,கும் அதிக அளவில் போராட வேண்டி இருக்கும் என்பதால் அது 3வது அணிக்கே சாதகமாக அமையும்.
பலவீனம் : பலமான தலைவர் யாரும் இல்லாதது ஒட்டுமொத்த 3வது அணிக்கும் மிகப் பெரிய பலவீனம். ஒரே அணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் வேறு வேறு கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். வட கிழக்கு மாநில்ஙகளில் பா.ஜ.,வை பலமான கட்சியாக உருவெடுக்க இடதுசாரிகளும், காங்.,ம் வழிவகுத்து கொடுத்தது பலவீனமாக அமைந்துள்ளது.
வாய்ப்புக்கள் : சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டசபைகளில் 3 ல் வெற்றி பெற்றது 3வது அணிக்கு வெற்றி வாய்ப்பு தரும் விஷயங்களாக உள்ளன. பல மாநிலங்களில் பா.ஜ., 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதும், பிராந்திய கட்சிகள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாததும் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
சவால்கள் : மாநில கட்சிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால் எந்த மாநிலத்தில் யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பம் வாக்காளர்களிடம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரதமரை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி பலரிடமும் நம்பிக்கையை பெறவில்லை. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியிலிருந்து காங்., புறக்கணிப்பட்டிருப்பது 3வது அணியின் ஒற்றுமையில் விரிசலாக பார்க்கப்படுகிறது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews