கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்: சிதம்பரம் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

கல்வியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம்: சிதம்பரம் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகையில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:இந்த மக்களவைத் தேர்தல் பிரதமரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல். இதில், மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய வேண்டும்.
மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி வந்தால் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவார்கள். பருவமழை பொய்த்து தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால்,உபரி நீரை சேமிக்க குடி மராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. 3 ஆயிரம் ஏரி குளங்கள் குடி மராமத்து திட்டத்தில் தூர் வாரப்பட்டுள்ளன. இந்த நீர்வளத் திட்டங்களுக்காக முதல் கட்டமாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. சிதம்பரம் பகுதியில் பெராம்பட்டு அருகே ரூ.19 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று சிறப்பாக நடத்தி வருகிறது. ஏழை குடும்பங்களுக்கு ரூ 2,000 வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து திமுக தடுத்து நிறுத்தி உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் அந்த பணம் கிடைக்கும். காப்பீட்டுத் திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்வியில் புதிய புரட்சியையும் மறுமலர்ச்சியையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான ரூ.6 ஆயிரம் பெரும்பாலான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நல்லாட்சி அமைந்திட, மோடி பிரதமராக வர இந்தத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews