பொதுத்தேர்வு எழுதுவதில் ஆர்வம் கொள்ளாமல் இருந்த மாணவர் ஒருவரை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் வீட்டுக்கே சென்று, கவுன்சலிங் கொடுத்து உற்சாகப்படுத்திய ஆசிரியர்
படிப்பில் பிடிப்பு இல்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் ஆர்வம் கொள்ளாமல் இருந்த மாணவர் ஒருவரை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் வீட்டுக்கே சென்று, கவுன்சலிங் கொடுத்து உற்சாகமாக்கி இருக்கிறார். மற்ற மாணவர்கள் அளித்த ஒத்துழைப்பில் அந்த மாணவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்க ஆசிரியர் முடிவு செய்திருக்கிறார். இதனால் உற்சாகமாகி, '90 சதவிகிதம் மார்க்குகள் எடுப்பேன்' என்று அந்த மாணவர் கூறி இருப்பது பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இயங்கி வருகிறது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுதர்சன் என்ற மாணவர், கடந்த ஒரு மாதம் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. படிப்பில் ஆர்வமின்றி காணப்பட்டிருக்கிறார். பொதுத்தேர்வு நடப்பதால், தேர்வுகளையும் சரியாக எழுதவில்லையாம். இதை அறிந்த அந்தப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் தனபால், மாணவரின் வீட்டுக்கு நேரே சென்று, சுதர்சனுக்கு உளவியல் நீதியாக ஆலோசனை வழங்கி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி இருக்கிறார். ``நாங்க ஏழைபாழைங்க. நல்லா படிச்சு, பொழச்சுக்கடான்னா, ஊதாரியா போயிருவான் போலிருக்கு சார்.
இவன் பதரா போனா, எங்க குடும்பமே சிதறிடும்' என்று அவரின் பெற்றோர்களும் கண் கலங்கி இருக்கின்றனர். ஆசிரியரும், சுதர்சனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, ``நாளை வந்து உன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்'' என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். மாணவனும் பள்ளிக்கு வர சம்மதித்தான். குறிப்பிட்டதுபோல் நேற்று காலை மாணவன் வீட்டுக்குச் சென்ற தனபால், தயாராக இருந்த சுதர்சனை அழைத்திருக்கிறார். இருவரும் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்றிருக்கிறார்கள்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்