தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள்: ஏப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 19, 2019

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள்: ஏப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
click below link for download
click Here to download pdf
தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுகளுக்கு தனிநபர், கல்வி நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு 2018-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் குறித்த சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பம் விநியோகம்: இதற்கான விண்ணப்பங்கள் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். மேலும், www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குநர், தரைத் தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரிக்கு ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இந்த விருதுக்கான தகுதி, விதிகளுக்கு www.environment.tn.nic.in இணையதள முகவரி அல்லது 044 24336421 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews