மாணவர்கள் பாதுகாப்பு; இன்று விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

மாணவர்கள் பாதுகாப்பு; இன்று விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க கோரும் பொது நல மனு, உச்ச நீதிமன்றத்தில், இன்று(பிப்.,22) விசாரணைக்கு வருகிறது. ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், &'ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்&' எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.&'&'அவசரம் கருதி, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்,&'&' என, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காலின் கான்சால்வஸ், உச்ச நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, &'வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்&' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews