மதிப்பெண் சான்றிதழ் மோசடி மாஜி துணைவேந்தருக்கு சிறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

மதிப்பெண் சான்றிதழ் மோசடி மாஜி துணைவேந்தருக்கு சிறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோல்கட்டா, விஸ்வ பாரதி பல்கலை, போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி வழக்கில், முன்னாள் துணைவேந்தர், திலீப் சின்ஹாவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள விஸ்வ பாரதி பல்கலையில், துணை வேந்தராக, 1995 - 2001ல் இருந்தவன் திலீப் சின்ஹா. இங்கு, கணித பேராசிரி யையாக, 1997ல், பணியில் சேர்ந்தவள், முக்தி தேவ்.இந்நிலையில், 2004ல், பல்கலை அதிகாரிகளுக்கு, முக்தி தேவின் கல்வி தகுதி குறித்து சந்தேகம் ஏற்பட்டது. அவளிடம் சான்றிதழ்களை கேட்டனர். அதற்கு முக்தி தேவ், &'அசல் சான்றிதழ்கள் காணாமல் போய்விட்டன&' எனக்கூறி, நகல்களை சமர்ப்பித்தாள்; அதைப்பார்த்த அதிகாரிகளுக்கு, அவை போலி என தெரிந்தது.
விசாரணையின் போது, பல்கலை துணைவேந்தராக இருந்த சின்ஹா, பதிவாளர், திலீப் முகர்ஜி, முக்தி தேவ் ஆகியோர் இணைந்து, போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து, மோசடி செய்து உள்ளது தெரிந்தது. உரிய கல்வி தகுதி இல்லாமல், பேராசிரியையாக முக்தி தேவ் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, முக்தி தேவை, அதிகாரிகள், &'டிஸ்மிஸ்&' செய்தனர்.திலீப் சின்ஹா, திலீப் முகர்ஜி, முக்தி தேவ் ஆகியோர் மீது, போல்பூர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். கடந்த, 15 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், &'சின்ஹா உட்பட மூன்று பேரும் குற்றவாளிகள்&' என, நேற்று அறிவிக்கப்பட்டனர். மூவருக்கும் தலா, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி, தீர்ப்பு அளித்தார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews