திண்டுக்கல்லில் ஆசிரியர் உட்பட மூவர் கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

திண்டுக்கல்லில் ஆசிரியர் உட்பட மூவர் கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
திண்டுக்கல்லில் வெவ்வேறு சம்பவங்களில் மூவர் கொலை செய்யப்பட்டனர்.திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் 40. மனைவி சசிகலா 30, மகள் பூவிதா 14. இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். நேற்று மாலையில் சசிகலாவும், மகள் பூவிதாவும் கடைக்கு சென்றனர். அங்கு வந்த செல்வராஜூக்கும், அவர்களுக்கும் இடையே சண்டை முற்றியது. ஆத்திரத்தில் மனைவி, மகளை அரிவாளால் செல்வராஜ் வெட்டினார். இதில் சசிகலா பலியானார். செல்வராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜீவா 35. சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சாக்குக்கடை சந்து பகுதியில் காயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றனர்.அடையாளம் தெரியாத ஒருவர் ஜீவாவை தாக்கியது தெரிந்தது. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்ற ஜீவா நேற்று முன்தினம் இறந்தார்.
திண்டுக்கல் அருகே என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜான்யாகப்பராஜ் 70. இவருக்கும், இதே ஊரைச்சேர்ந்த புறா பாஸ்கர் 31, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று நடந்த வாக்குவாதத்தின்போது மோதல் ஏற்பட்டது. நிலைதடுமாறி விழுந்த ஜான்யாகப்பராஜ் காயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். புறா பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews