கணவரின் கனவுப் பணியைக் கையில் எடுத்து ராணுவத்தில் சேரும் மனைவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 25, 2019

கணவரின் கனவுப் பணியைக் கையில் எடுத்து ராணுவத்தில் சேரும் மனைவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ராணுவப் பணியின் போது உயிரிழந்த மேஜர் ஒருவரின் மனைவி தன் வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்திச் சேர்ந்த கவுரி சட்டப் படிப்பை முடித்தவர். இவர் பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜரை திருமணம் செய்திருந்த நிலையில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தார்.
கணவனை இழந்த பின் சோகத்தில் ஆழ்ந்திருந்த கவுரி, தாய் நாட்டைக் காக்கும் தமது கணவரின் துறையையே தாமும் தேர்ந்தெடுத்துள்ளார். ராணுவத்தில் சேர்வதற்கான SSB தேர்வை முதன் முறையாக எழுதி தேர்ச்சி பெறத் தவறிய கவுரி, விடாப்பிடியாக படித்து தம்மைப் போன்றவர்களுக்கான பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றார். வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியில் சேரவுள்ள அவர், அடுத்த ஆண்டு லெஃப்டினன்ட் ஆக ராணுவத்தில் இணைகிறார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews