Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 20, 2018

Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா?

வாட்ஸ்அப், வீசாட், ஸ்கைப் போன்ற OTTசேவைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளைவிதிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறதுட்ராய். இது எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்? வாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக்கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா? #OTTRegulations வாட்ஸ்அப், ஸ்கைப், ஹைக் போன்ற OTTபிளாட்ஃபார்ம் சேவைகளுக்குத்தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோலவே புதுக் கட்டுப்பாடுகள்விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது ட்ராய். இதுதொடர்பாக கடந்தவாரம்Consultaion Paper- ஐ வெளியிட்டிருக்கும் ட்ராய்,தற்போது நிறுவனங்களின்கருத்துகளுக்காகக் காத்திருக்கிறது.ஒருவேளை OTT பிளாட்ஃபார்ம்களுக்குப்புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் மெசஞ்சர்வரை அனைத்து ஆப்களிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். வாட்ஸ்அப் போலவோ,ஹைக் போலவோ புதிதாக இனி எந்தவொரு ஆப்பும் வரமுடியாத நிலைகூட வரலாம்.
எதற்காக இப்படியொரு முடிவைஎடுக்கவிருக்கிறது ட்ராய்? நெட் நியூட்ராலிட்டியில் தொடங்கியபிரச்னை! OTT பிளாட்ஃபார்ம்களுக்குக் கட்டுப்பாடுகள்விதிப்பது தொடர்பான சர்ச்சை இப்போதுஅல்ல; 2015- லேயே தொடங்கிவிட்டது. அந்த வருடம் முதன்முதலில் ஏர்டெல்நிறுவனமானது ஸ்கைப், வைபர் போன்றVoIP சேவைகளுக்குத் தனிக் கட்டணங்கள்நிர்ணயித்தது. அதாவதுவாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டா பேக்வைத்திருந்தாலும் கூட, அந்த டேட்டாவில்இந்த VoIP சேவைகளைப் பயன்படுத்தமுடியாது. மாறாக, இதற்கெனத் தனி ரீசார்ஜ்தான் செய்யவேண்டும். இதற்குஅப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அடுத்ததாக அதே வருடம் பிப்ரவரி மாதம்ஃபேஸ்புக் ஆனது, இந்தியாவின் இணையவசதி இல்லாத இடங்களில் இலவசஇணையச் சேவையை வழங்குவதற்காக Internet.org எனும் திட்டத்தைச் செயல்படுத்தியது. Free Basics எனஅழைக்கப்பட்ட இந்தத் திட்டம் மூலமாககுறிப்பிட்ட சில இணையதளங்கள் மட்டும்அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக இருந்தஇந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும்எதிர்க்க, இறுதியில் இது கைவிடப்பட்டது.இதேபோல ஏர்டெல் நிறுவனமும் குறிப்பிட்டசில இணையதளங்களுக்கு மட்டும்முன்னுரிமை தரும் ஏர்டெல் ஜீரோ எனும்திட்டத்தை அறிவித்து,
அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படி நெட் நியூட்ராலிட்டி,ஜீரோ ரேட்டிங், OTT சேவைகளுக்கானகட்டுப்பாடுகள் அனைத்துப் பிரச்னைகளும்ஒருங்கே கிளம்பவே அனைத்துக்குஎதிராகவும் அடுத்தடுத்து ட்ராய் புதுப்புதுவிதிமுறைகளை உருவாக்கியது.அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் முன்னுரிமைதரும் ஜீரோ ரேட்டிங், நெட் நியூட்ராலிட்டி ஆகிய இரண்டு பிரச்னைகளும் முடிவுக்குவந்தன. ஆனால், OTT சேவைகளுக்கும்,டெலிகாம் நிறுவனங்களுக்கும்இடையேயான தகராறு மட்டும் தீரவில்லை. தற்போது அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் இந்தப் புதிய ஆலோசனை அறிக்கை மூலம் மீண்டும்`பஞ்சாயத்தைக்' கூட்டியிருக்கிறது ட்ராய்.சரி, இவர்களுக்குள் என்ன பிரச்னை? வாட்ஸ்அப் 2013-14 வரைக்கும் டெலிகாம்நிறுவனங்களின் வருமானத்தில் பெரியபிரச்னைகள் எதுவுமில்லை. அதற்கு முந்தைய வருடம் உச்சநீதிமன்றம்122அலைக்கற்றை ஒப்பந்தங்களைச் செல்லாதுஎன அறிவித்தது மட்டும்தான் அப்போது டெலிகாம் துறையில் ஏற்பட்ட பெரும்அதிர்வு. ஆனால், அதற்கடுத்த வருடங்களில் அதைவிடவும் பெரிய அதிர்வுகள்உண்டாகின. கொஞ்சம் கொஞ்சமாகவிஸ்வரூபம் எடுத்த மொபைல் இன்டர்நெட், டெலிகாம் நிறுவனங்களின் வருவாயில்நேரடியாகக் கைவைத்தது. அதுவரைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் வருமானத்தில்பெரும்பங்கு வகித்த எஸ்.எம்.எஸ் மற்றும்கால்களின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. மாறாக மொபைல் இன்டர்நெட்பயன்பாடும், அதன்மூலம் வந்த வருவாயும் பெருகியது. இதைத் தொடர்ந்து வாய்ஸ்கால்களில் விட்ட லாபத்தை, டேட்டா பேக்குகளின் விலை மூலம் ஈடுகட்டினஇந்நிறுவனங்கள்.
ஆனால், 2016- ல் வந்தஜியோ அதற்கும் முடிவுகட்டியது. குறைவான விலையில் அன்லிமிட்டட் டேட்டா , வாய்ஸ்கால் சேவைகளை அள்ளி வழங்கவும்,பிறநிறுவனங்களும் தங்கள் விலையைக் குறைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குஉள்ளாகின. இதனால் மீண்டும் டெலிகாம்நிறுவனங்களின் வருவாயில் பலத்த அடிவிழுந்தது. இந்த நெருக்கடியால் இந்தியதனியார் டெலிகாம் நிறுவனங்கள் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது.இன்று இந்தியாவில் ஏர்டெல், வோடஃபோன்,ஜியோ ஆகிய மூன்று தனியார்நிறுவனங்களிடையேதான் போட்டி. இதுபோக அரசின் பி.எஸ்.என்.எல் சேவை.இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டண விவரங்களைமாற்றுவது, வேலிடிட்டி பேக்குகளைஅறிமுகப்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.இது ஏன், எதனால் என்பதை முன்பேபார்த்தோம். சரி, இப்போது OTT சேவைகளைஏன், டெலிகாம் நிறுவனங்கள்எதிர்க்கின்றன எனப் பார்ப்போம். ஏற்கெனவே பார்த்தது போல வாட்ஸ்அப்,மெசஞ்சர் போன்றவை டெலிகாம்நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கிறதுஎன்பதுதான் முதல் காரணம். இன்றைக்குஇந்தியாவில் டெலிகாம் சேவைவழங்குவதற்கான ஒரு நிறுவனம்தொடங்கப்படும் என்றாலோ,நடத்தவேண்டும் என்றாலோ, நிறையவிதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். உதாரணமாக, அரசிடம் அனுமதி வாங்குவது, அலைக்கற்றைகளை ஏலம் எடுப்பது,ட்ராயின் ஒழுங்குமுறைகள், அரசின்சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடப்பது எனப்பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.ஆனால், OTT சேவைகளுக்கு எவ்விதகட்டுப்பாடுகளும் இல்லை. OTT சேவைஎன்பது என்ன? இணையம் மூலம்கிடைக்கும் அனைத்து சேவைகளுமே OTT (Over The Top) சேவைகள்தாம். இன்றுமொபைலில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்,மெசஞ்சர், ஃபேஸ்புக், அமேசான் பிரைம்,ஃப்ளிப்கார்ட், பேடிஎம் போன்றஅத்தனையுமேOTT- க்குள் அடங்கும். ஆனால்,டெலிகாம் நிறுவனங்கள் குற்றம்சாட்டுவதுஇவையனைத்தையும் அல்ல; VoIP (Voice over Internet Protocol) எனப்படும் இன்டர்நெட்டெலிபோன் சேவையை வழங்கும் நிறுவனங்களை மட்டும்தான். உதாரணமாக,வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் வாய்ஸ்கால்இரண்டும் டெலிகாம் நிறுவனங்களின்எஸ். எம்.எஸ் மற்றும் வாய்ஸ்கால்சேவையைப் பாதிப்பது; ஸ்கைப், வைபர்,மெசஞ்சர் போன்ற அனைத்தும்இதேபோலத்தான். இப்படி டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளைப் போலவே,வேறு சேவைகளை வழங்கும் OTTசேவைகளை மட்டும்தான் குறிவைக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள். தற்போது ட்ராயும்`OTT services as can be regarded the same or similar to the services provided by Telecom Service Providers' என்ற அடிப்படையில் இவற்றுக்குமட்டும்தான் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா எனக் கேட்டிருக்கிறது. இது முதல் பிரச்னை. ட்ராய்யின் புது கட்டுப்பாடுகள் சரியா? இரண்டாவது இந்த OTT சேவைகளின்பிசினஸ் மாடல். டெலிகாம் நிறுவனங்களின்சேவைகள் அனைத்துமே அதன்உள்கட்டமைப்புகளைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, வாய்ஸ் மற்றும் டேட்டாஇரண்டுக்கும் டெலிகாம் நிறுவனங்கள்தாம் டவர்களையோ, கேபிள்களையோ உருவாக்கவேண்டும். அலைக்கற்றைகளை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால், OTTநிறுவனங்களுக்கு இப்படியில்லை.உதாரணமாக வாட்ஸ்அப்பைஎடுத்துக்கொண்டால், வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களின் டேட்டாவைப்பராமரிப்பது, சர்வர்களில் கையாள்வதுபோன்ற பணிகளை மட்டும்தான்அந்நிறுவனம் செய்யும். சேவையைப் பயன்படுத்துவதற்கு டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க்கைத்தான்பயன்படுத்தும். சேவைகளைவாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கென பிரத்யேகமாக அவர்களிடம்எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. இப்படி எங்கள் நெட்வொர்க்கையே பயன்படுத்தி,எங்களுக்குப் போட்டியாகவே OTT நிறுவனங்கள் இயங்குவது சரியா எனக்கேட்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்.
இப்படி ஒரே சேவையை ஒரு நிறுவனம் கடும்கட்டுப்பாட்டுடனும், பொருட்செலவுடனும், இன்னொரு நிறுவனம் எவ்விதகட்டுப்பாடுகளும் இன்றியும் வழங்க ட்ராய்அனுமதிப்பது சரியா என்பதுதான் டெலிகாம்நிறுவனங்களின் வாதம். இதற்கு மாற்றாகடெலிகாம் நிறுவனங்கள் கேட்பது, ``OTTசேவைகளுக்கு லைசென்ஸ் முறையைக்கொண்டுவர வேண்டும்; அவற்றை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரவேண்டும்; இல்லையெனில், டெலிகாம் நிறுவனங்களுக்கு OTT சேவைகள் பணம்செலுத்தவேணும் வழிசெய்யவேண்டும்" என்பதைத்தான். இதை மட்டும்வைத்துப்பார்த்தால் டெலிகாம் நிறுவனங்களின் வாதம் முழுவதும் சரிஎன்பது போலத்தான் தோன்றும். ஆனால், இன்னொருபுறம் இந்த விதிமுறைகள்எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்என்பதையும் வைத்துப்பார்க்க வேண்டும். Airtel Jio Vodafone டெலிகாம் நிறுவனமானது முதன்மையாகஇரண்டு விதமான சேவைகளைவழங்குகிறது. முதலாவது, வாய்ஸ்கால் / எஸ்.எம்.எஸ் போன்ற தொலைத்தொடர்புசேவைகள். இரண்டாவது, மொபைல்இன்டர்நெட் எனப்படும் இணைய சேவை. இந்த இணைய சேவையின் கீழ்தான் VoIPசேவைகளாக வாட்ஸ்அப், ஸ்கைப்அனைத்தும் வரும். இதில், ட்ராய்யின் பணி என்பது மொபைல் நிறுவனங்களின்பணிகளைப் பராமரிப்பது, பிரச்னைகளைத் தீர்ப்பது, அவர்களுக்கான அலைக்கற்றைகளை ஒழுங்குபடுத்துவது,புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதுபோன்றவை மட்டும்தான் . மாறாக,வாட்ஸ்அப், மெசஞ்சர், ஸ்கைப்போன்றவற்றின் சேவைகளைகட்டுப்படுத்துவதோ, ஒழுங்குபடுத்துவதோஅல்ல ; அப்படியெனில் ட்ராய் இந்தவிஷயத்தில் முடிவெடுக்க முடியுமா அல்லதுமத்திய தகவல் தொழில்நுட்பத்துறைதான்இதில் முடிவெடுக்க வேண்டுமா என்றகுழப்பம் நீடிக்கிறது.
அடுத்த சிக்கல், இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம்.உதாரணமாக, OTT சேவைகளுக்குகட்டுப்பாடுகள் விதித்தால்அந்நிறுவனங்கள் கூடுதல் நிதிச்சுமையைச் சந்திக்கும். இது மக்களிடமே தாக்கத்தைஏற்படுத்தும். இரண்டாவது, இந்தலைசென்ஸ் முறையானது புதிய ஸ்டார்ட்அப்கள் எதுவும் OTT விஷயத்தில்ஆதிக்கம் செலுத்தவிடாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். அடுத்தது, இந்த VoIPசேவைகளானது வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல; கேமிங்கில் கூட சாட்டிங்ஆப்ஷன் இருக்கிறது. அப்படியெனில் அந்தசேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும்அல்லது கட்டணம் நிர்ணயிக்கப்படும்என்றால் வாடிக்கையாளர்களுக்கு இன்று கிடைக்கும் கேமிங் மற்றும் சாட்டிங்அனுபவமே பாதிக்கப்படலாம். இதேபோல OTT நிறுவனங்கள் மீதுவைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு,அவை எவ்விதமான சட்டவிதிகளுக்கும் உட்படவில்லை என்பது.
ஆனால், அதையும்மறுக்கின்றன இந்நிறுவனங்கள். இந்தியஅரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000- ன் படி பாதுகாப்பு விஷயத்தில் ஏற்கெனவேOTT நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவையே போதுமே என்பதுஇவர்கள் வாதம். மேலும், OTT நிறுவனங்கள்டெலிகாம் மீது வைக்கும் இன்னொருகுற்றச்சாட்டு இன்று டெலிகாம் நிறுவனங்களே தங்கள் எல்லையைத்தாண்டி பிற OTT சேவைகளைவழங்குகின்றன. உதாரணமாக ஏர்டெல் டிவி,ஜியோ சினிமா போன்றவை. இப்போது VoIPசேவைகளுக்கு விதிக்கப்படும்கட்டுப்பாடுகள் அடுத்து பிற OTTசேவைகளுக்கும் பரவும்போது டெலிகாம் நிறுவனங்களின் OTT சேவைகள் முன்னுரிமை பெறலாம். இதுவும்தவறுதானே என்பது எதிர்தரப்பு வாதம். சரி,அப்படியென்றால் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? இன்டர்நெட் இந்தியாவுக்கு முன்னதாகவே இந்த OTT Vsடெலிகாம் சண்டை பிறநாடுகளில்தொடங்கிவிட்டது. இதற்கு ஐரோப்பியயூனியன் மற்றும் பிரான்ஸ்,இந்தோனேஷியா, ஜெர்மனி போன்றநாடுகள் அந்தந்த நாட்டின் தன்மைக்கேற்பவிதிமுறைகளையும் வகுத்துள்ளன. இதேபோல ட்ராயும் தொலைத்தொடர்புநிறுவனங்களின் பிரச்னை என்று மட்டும் பார்க்காமல், இணையத்தின் பிரச்னைஎன்றேதான் இதனை அணுகவேண்டும்.அப்போதுதான் இனி உருவாகவிருக்கும் OTT நிறுவனங்களுக்கும், இப்போது இருக்கும்டெலிகாம் நிறுவனங்களுக்கும் எந்தப்பிரச்னையும் இல்லாமல் இருக்கும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews