ஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 13, 2018

ஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். வாரம் ஒரு நாள் முன்னறிவிப்பின்றி பத்து அதிகாரிகள் குழு ஒரே நேரத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் துவக்கினார்
இத்திட்டம் ஆசிரியர் மற்றும் பள்ளி நற்செயல்பாடுகளை விட குறைபாட்டை அதிகம் சுட்டிக்காட்டுவதாகவும், ஆசிரியரை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ''ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் 'கழுகு பார்வை' கொண்டு ஆசிரியரை பார்க்கின்றனர்.
எந்த மாவட்டத்திலும் இத்திட்டம் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளன. இத்திட்டம் தேவையில்லை,'' என்றார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சந்திரன் கூறுகையில், 'பள்ளிகள் கல்வி கற்பிக்கும் இடம். அங்கு 'ஆபரேஷன்-இ' என ஏதோ தீவிரவாதியை பிடிப்பதாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். அல்லது கல்வி ஆலோசனை குழு என பெயர் மாற்றம் வேண்டும்,' என்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews