அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு அலுவலர் கெடு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 13, 2018

அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு அலுவலர் கெடு!!

ஈரோடு மாவட்ட, விளையாட்டு அலுவலர், நோயலின் ஜான், அரசுப்பள்ளிகளுக்கு கெடு விதித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது: உலக திறனாய்வு தடகள போட்டி, ஈரோட்டில் இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது இதில் பங்குபெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் பட்டியலை, கடந்த ஜூன் மாதமே ஒப்படைக்கும்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தரப்பட்டது.
ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ள மாவட்டத்தில், 190 பள்ளிகள் மட்டுமே பட்டியல் தந்துள்ளனர் மற்ற பள்ளிகள் பலமுறை கேட்டும், செவி சாய்க்கவில்லை. இதுபோன்ற பள்ளிகளுக்கு, இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. வரும், 25ம் தேதிக்குள் வீரர்கள் குறித்த பட்டியலை ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் நடப்பாண்டின், உலக திறனாய்வு விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews