மாவட்ட தேர்வுத்துறை அலுவலகம் செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
அரசு உத்தரவிட்டும் மாவட்ட தேர்வு துறை அலுவலகங்கள் செயல்பாட்டிற்கு வராததால் கூடுதல் பணி சுமையால் கல்வி அலுவலர்கள் அவதிப்படுகின்றனர்
எட்டு மண்டல தேர்வுத்துறை அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, 32 மாவட்டங்களிலும் 1.10.2018 முதல் அவை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படும் என அரசு உத்தரவிட்டது
இதன்படி சி.இ.ஓ.,க்களால் அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டன
தலா ஒரு துணை இயக்குனர், 2 கண்காணிப்பாளர், 5 இளநிலை மற்றும் உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன
சென்னை தேர்வுத்துறை அலுவலகத்தின் 16 பிரிவுகள் தவிர, மீதமுள்ள பிரிவில் உள்ளோருக்கு மாவட்டம் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன
ஆனாலும் மாவட்ட அலுவலகம் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வுத்துறை பணிகளை கல்வி அலுவலர்களே கூடுதலாக கவனிக்கின்றனர்
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது
வினாத்தாள் தயாரிப்பில் மட்டுமே தேர்வுத்துறை கவனம் செலுத்துகிறது.
அத்துறையில் இருந்த சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்ப்பு
பொதுத்தேர்வுக்கான மாணவர் தேர்வு எண்கள் தயாரிப்பு உட்பட பல கூடுதல் பணிகளை கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டியுள்ளதால்பெரும் சுமையாக உள்ளது. நிர்வாக சீரமைப்பிற்கான உத்தரவை விரைந்து செயல்படுத்தியது போல் தேர்வுத்துறை தொடர்பான உத்தரவையும் செயல்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்