உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 25 (November 25 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 25, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 25 (November 25 )





நவம்பர் 25 (November 25 ) கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர்.
1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான்.
1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான்.

1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன.
1510 – போர்த்துக்கீசக் கடற்படை
அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், உள்ளூர் கூலிப்படையினரின் உதவியிலும், கோவாவை
பிஜப்பூர் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றியது. 451 ஆண்டு கால போர்த்துக்கீசக் குடியேற்ற ஆட்சி ஆரம்பமானது.
1667 – காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த
நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1759 – பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.
1783 – அமெரிக்கப் புரட்சிப் போர் :
1783 பாரிசு உடன்படிக்கை : கடைசி
பிரித்தானியப் படைகள்
நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
1795 – சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிசுலாசு ஆகத்து பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு
உருசியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1833 – சுமாத்திராவில் 8.7
நிலநடுக்கம் , மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1839 – இந்தியாவில் பலத்த
சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1905 – டென்மார்க் இளவரசன் கார்ல்
நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஆக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.
1917 – முதலாம் உலகப் போர் :
செருமனியப் படை மொசாம்பிக் ,
தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தது.
1926 – ஐக்கிய அமெரிக்காவின்
ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற
சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றனர்.
1936 – சப்பானும், செருமனியும்
சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1941 – இரண்டாம் உலகப் போர் : பிரித்தானியாவின் 'பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் , டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில்
ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

1947 – நியூசிலாந்து
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.
1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.
1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.
1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1977 – பிலிப்பீன்சின் முன்னாள் மேலவை உறுப்பினர் பெனீனோ அக்கீனோவிற்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1983 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – ரொடீசியாவிலிருந்து
மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு
தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற
சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.
1992 –
செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு , சிலவாக்கியா என இரண்டாக 1993 சனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
1996 – அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

பிறப்புகள்
1835 – ஆண்ட்ரூ கார்னேகி , இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919 )
1844 – கார்ல் பென்ஸ் , செருமானியத் தொழிலதிபர் (இ. 1929 )
1880 – லெனார்ட் வூல்ஃப் , ஆங்கிலேய அரசியல் கோட்பாட்டாளர், எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1969 )
1881 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (இ. 1963 )
1915 – அகஸ்தோ பினோசெட் , சிலியின் 30வது அரசுத்தலைவர் (இ. 2006 )
1926 – ரங்கநாத் மிஸ்ரா, இந்தியாவின் 21வது தலைமை நீதிபதி (இ. 2012)
1952 – இம்ரான் கான் , பாக்கித்தான் துடுப்பாளர், அரசியல்வாதி

1956 – திருவாரூர் பக்தவத்சலம் , தென்னிந்திய மிருதங்க இசைக் கலைஞர்
1965 – டக்ரே ஸ்காட், இசுக்கொட்டிய நடிகர்
1978 – ராக்கி சாவந்த், இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்
1943 – இராசா சாண்டோ , தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1894 )
1950 – யொகான்னசு வி. யென்சென் ,
நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (பி. 1873)
1960 – மிராபல் சகோதரிகள் , டொமினிக்கன் குடியரசுப் போராளிகள்
1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு , தெலுங்கு கருநாடக, வயலின் இசைக் கலைஞர் (பி. 1893)
1973 – வி. ஏ. அழகக்கோன் , இலங்கை அரசியல்வாதி (பி. 1903 )

1974 – ஊ தாண்ட் , பர்மிய வழக்கறிஞர்,
ஐநாவின் 3வது பொதுச் செயலர் (பி. 1909)
1984 – ஒய். பி. சவாண், இந்தியாவின் 5வது துணைப் பிரதமர் (பி. 1913 )
1997 – ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா , மாலாவியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1898 )
2014 – சிதாராதேவி, இந்திய நடிகை, நடனக் கலைஞர் (பி. 1920 )
2016 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (பி. 1936 )
2016 – பிடல் காஸ்ட்ரோ , கியூபாவின் 15வது அரசுத்தலைவர், புரட்சியாளர் (பி.
1926 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் , ( சுரிநாம், நெதர்லாந்திடம் இருந்து 1975)
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

வெளி இணைப்புகள்
பிபிசி: இந்த நாளில் Click Here

நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில் Click Here
கனடா : இந்த நாளில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews