உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 24 (November 24 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 24, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 24 (November 24 )




நவம்பர் 24 (November 24 ) கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு
கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார்.
1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.
1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.
1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர்
தாசுமேனியா எனப் பெயர் பெற்றது

1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய் ,
கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி ராவை நீக்க மறுத்தமைக்காகக் கைது செய்தார்..
1859 – சார்லஸ் டார்வின்
உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார்.
1914 – முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1917 – அமெரிக்காவின்
விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர்
மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1922 – துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர் :
சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.<

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்:
தோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானப் படை வடக்கு மரியானா தீவுகளில் இருந்து குண்டுகளை வீசின.
1963 – அமெரிக்க அரசுத்தலைவர்
ஜான் எஃப். கென்னடியை சுட்டுக் கொன்ற லீ ஆர்வி ஆசுவால்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
1965 – யோசப் மொபுட்டு
கொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
1966 –
செக்கோசிலோவாக்கியாவில்
பிராத்திஸ்லாவா நகரில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் உயிரிழந்தனர்.
1969 – சந்திரனுக்குச் சென்ற
அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1971 – வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
1973 – 1973 எண்ணெய் நெருக்கடியை அடுத்து செருமனியில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இது அடுத்த நான்கு மாதங்களுக்கு அமுலில் இருந்தது.
1976 – துருக்கியின் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1992 – யாழ்ப்பாணம் , பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி
விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

2002 – ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் தில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006 – சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
2012 – டாக்கா நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்.
2015 – உருசியாவின் சுக்கோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.
2016 – கொலம்பியா அரசும்
கொலம்பியா மக்கள் இராணுவமும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. நாட்டின் 50-ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.


பிறப்புகள்
1784 – சக்கரி தைலர் , அமெரிக்காவின் 12வது
அரசுத்தலைவர் (இ. 1850 )
1888 – டேல் கார்னெகி , அமெரிக்க எழுத்தாளர் (இ. 1955 )
1918 – கிருஷ்ண சைதன்யா , மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (இ. 1994 )
1939 – எஸ். ஏ. ஐ. மத்தியு , இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (இ. 2016)
1943 – மான்டெக் சிங் அலுவாலியா, இந்தியப் பொருளியலாளர், ஆட்சிப் பணி அதிகாரி
1955 – இயன் போத்தம் , ஆங்கிலேயத் துடுப்பாளர்
1961 – அருந்ததி ராய் , இந்திய எழுத்தாளர் Click Here Know More
1968 – அனுர குமார திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி
1969 – ருமேஸ் களுவித்தாரன, இலங்கைத் துடுப்பாளர்


இறப்புகள்
1675 – குரு தேக் பகதூர் , இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1621)
1834 – ஜான் கில்லிஸ் , இசுக்கொட்லாந்து தாவரவியலாளர் (பி. 1792 )
1891 – லிட்டன் பிரபு, ஆங்கிலேய கவிஞர் (பி. 1831 )
1953 – ராமச்சந்திர தீட்சிதர் , தமிழக இந்தியவியலாளர் (பி. 1896 )
1973 – ஏ. எம். ஏ. அசீஸ் , இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1911)
1980 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (பி. 1902 )
2002 – ஜான் ரால்ஸ், அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1921 )
2004 – ஆர்தர் ஹெய்லி , ஆங்கிலேய-கனடிய எழுத்தாளர் (பி. 1920)
2009 – சமாக் சுந்தரவேஜ் , தாய்லாந்தின் 25வது பிரதமர் (பி.
1935 )
2014 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937 )
2015 – ஏ. எஸ். பொன்னம்மாள், தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர்

சிறப்பு நாள்
படிவளர்ச்சி நாள் ( கொண்டாட்ட நாட்கள் )
ஆசிரியர் நாள் ( துருக்கி )

வெளி இணைப்புகள்
பிபிசி: இந்த நாளில் Click Here
நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில்
கனடா : இந்த நாளில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews