கல்வித்துறையில் அதிகரிக்கும் நீதிமன்ற வழக்குகள்: - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 18, 2018

கல்வித்துறையில் அதிகரிக்கும் நீதிமன்ற வழக்குகள்:

கல்வித்துறை நிர்வாகத்துக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கவனிக்கும் பொறுப்பு, அனுபவமற்ற பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தடுமாற்றம் அடைகின்றனர். தமிழகத்தில், தொடக்க கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்; பள்ளி கல்வித்துறையில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றின் நிர்வாக அலுவலகமாக, மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலகம், மாநில அளவில் இயக்குனரகம் செயல்படுகிறது.
பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் மீது எடுக்கும் நடவடிக்கை உள்ளிட்ட உத்தரவுகளுக்கு, நீதிமன்றம் சென்று தடையாணை பெறுவது அதிகரித்துள்ளது. இதேபோல், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் வழங்குவது, ரத்து செய்வது உள்ளிட்ட உத்தரவுகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுகின்றன. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் செல்வது, அரசு வக்கீலை சந்தித்து வழக்கு குறித்து விளக்கம் தெரிவிப்பது, உயரதிகாரிகளின் ஆணை குறித்த ஆவணங்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட பணிகளை, இவர்கள் மேற்கொள்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே பணியில் தொடரும் பணியாளர்கள், இரு மாதங்களுக்கு முன், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். அப்போது, நீதிமன்ற வழக்குகளை கவனித்தவர்கள், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இதனால், நீதிமன்ற வழக்குகளில், அனுபவமற்றவர்களே, தற்போது இப்பொறுப்புகளை ஏற்றுள்ளனர். இவர்கள் தடுமாறுவதால், பல வழக்குகள், நிர்வாகத்துக்கு எதிராக தீர்ப்பாகும் நிலை உள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews