உலக வரலாற்றில் இன்று - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 22, 2018

உலக வரலாற்றில் இன்று




அக்டோபர் 22 ( October 22 )
கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது.
794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ ) மாற்றினார்.
1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில்
உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.
1707 – சில்லி கடற்படைப் பேரழிவு : பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால்
சில்லி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
1784 – உருசியா அலாஸ்காவில் கோடியாக் தீவில் குடியேற்றத்தை அமைத்தது.
1797 – பதிவு செய்யப்பட்ட முதலாவது வான்குடைப் பாய்ச்சல் அந்திரே-சாக் கர்னெரின் என்பவரால் பாரிசு நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
1844 – பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைப் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள்
இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
1859 – எசுப்பானியா மொரோக்கோ மீது போர் தொடுத்தது.
1877 – இசுக்காட்லாந்தில் இடம்பெற்ற பிளான்டையர் சுரங்க விபத்தில், 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
1878 – செயற்கை ஒளிக்கு கீழ் முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.
1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
1927 – நிக்கோலா தெஸ்லா ஒரு முனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக்கைதிகள் நாட்சி செருமனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்:
செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது
நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.
1957 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.
1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில்
சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.
1964 – பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.
1964 – பிரெஞ்சு எழுத்தாளர் இழான் பவுல் சார்த்ரவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
1965 – இந்தியா - பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
1966 – சோவியத் ஒன்றியம் லூனா 12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.
1968 – நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1970 – துங்கு அப்துல் ரகுமான்

மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1972 – வியட்நாம் போர்: ஓ சி மின் நகரில் என்றி கிசிஞ்சரும் தென் வியட்நாமியத் தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.
1975 – சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.
1978 – இரண்டாம் அருள் சின்னப்பர்
திருத்தந்தையாக பதவியேற்றார்.
1987 – ஈழப்போர் : யாழ்ப்பாணம்
அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின்
உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
1999 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரான்சில் பணியாற்றிய மோரிசு பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு
மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2007 – எல்லாளன் நடவடிக்கை :
இலங்கையின் அனுராதபுரம்
இலங்கை வான்படைத் தளம் மீது
விடுதலைப் புலிகளின்
கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
2013 – ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தது.

பிறப்புகள்
1511 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1553 )
1811 – பிரான்சு லிசித்து , அங்கேரிய இசைக்கலைஞர் (இ. 1886 )
1844 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (இ. 1923 )
1870 – செ. இராசநாயகம் , ஈழத்து வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1940 )
1881 – கிளிண்டன் ஜோசப் டேவிசன் ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1958 )
1887 – ஜான் ரீட் , அமெரிக்க ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1920 )
1900 – அஷ்பகுல்லா கான், இந்திய விடுதலைப் போராளி (இ. 1927 )
1902 – டபிள்யூ. தகநாயக்க , இலங்கைப் பிரதமர், அரசியல்வாதி (இ. 1997 )
1905 – கார்ல் குதே யான்சுகி , அமெரிக்க இயற்பியலாளர், கதிர்வீச்சுப் பொறியியலாளர் (இ.
1950 )
1907 – எஸ். டீ. சௌலா , இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர் (பி.
1995 )
1919 – எச். வேங்கடராமன் , தமிழகத் தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1991 )
1919 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (இ. 2013 )
1922 – அ. துரையரசன் , தமிழக அரசியல்வாதி (இ. 1988 )
1936 – நிவ்விலி அலெக்சாண்டர் , தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரர்
1938 – கா. இந்திரபாலா , இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்
1946 – தீபக் சோப்ரா , இந்திய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
1967 – கார்லோசு மென்சியா , ஒந்துராசு-அமெரிக்க நடிகர்
1988 – பரினீதி சோப்ரா , இந்திய நடிகை

இறப்புகள்
1864 – மிரோன் வின்சுலோ, தமிழ் ஆங்கில விரிவான அகராதியைத் தொகுத்த அமெரிக்க மதப்பரப்புனர் (பி. 1789 )
1906 – பால் செசான், பிரான்சிய ஓவியர் (பி. 1839)
1918 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (பி. 1849 )
1925 – அ. மாதவையா , தமிழக புதின எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1872 )
1964 – கவாஜா நசிமுத்தீன் , பாக்கித்தானின் 2வது பிரதமர் (பி.
1894 )
1975 – அர்னால்ட் ஜோசப் டாயின்பீ , பிரித்தானிய நூலாசிரியர், வரலாற்றாசிரியர் (பி. 1889 )
1986 – ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி ,
நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1893 )
1990 – லூயி அல்தூசர் , அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி.
1918 )
2011 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் (பி. 1955 )


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews