9ம் வகுப்பு பாட புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தி மாணவர்களுக்கு கற்று தரும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 22, 2018

9ம் வகுப்பு பாட புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தி மாணவர்களுக்கு கற்று தரும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

*பள்ளி கல்வியின், 9ம் வகுப்பு பாட புத்தகத்தில், பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து, தவறான தகவல் இடம் பெற்று உள்ளதால், பிழையை திருத்தி, மாணவர்களுக்கு கற்று தரும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தமிழக பள்ளி கல்வியின் பாட திட்டம், 2017ல், புதிதாக மாற்றப்பட்டது. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்து உள்ளது. *இதற்கான புத்தகங்களை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., உருவாக்கிஉள்ளது.இதில், 9ம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தில், பல இடங்களில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
*பிழைகளை திருத்தி, மாணவர்களுக்கு கற்று தருமாறு, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து, பிழை திருத்த கையேட்டையும், எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ளது. *இதன்படி, நோபல் பரிசு பெற்ற, பாகிஸ்தான் இளம்பெண், மலாலா குறித்த பாடத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, 33 சதவீதம்; பழங்குடியினருக்கு, 3 சதவீதம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. *இதை, பெண்களுக்கான இடஒதுக்கீடு, 30 சதவீதம்; பழங்குடியினருக்கு, 1 சதவீதம் என, திருத்தி படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. *குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான, 'போக்சோ' சட்டம் என்பது, போஸ்கோ என்றும், பாஸ்கோ என்றும், 9ம் வகுப்பு, குடிமையியல் பாடத்தில், தவறாக அச்சாகி உள்ளது. அதை, போக்சோ சட்டம் என, திருத்தி படிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews