உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 17 ( October 17 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 17, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 17 ( October 17 )

அக்டோபர் 17 ( October 17 ) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது.
1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான். 1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர். 1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண்களுக்கு பிரான்சுக்கு விற்றான். 1800 – இடச்சு குடியேற்ற நாடான குராசோ பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. 1806 – எயித்தியப் புரட்சியின் முன்னாள் தலைவர் பேரரசர் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார். 1861 – ஆத்திரேலியா குயின்சுலாந்தில் பழங்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர். 1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும் , அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார். 1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா , கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன.
1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாட்சி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். 1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் கிரேக்கத்தின் செரெசு என்ற கிராமத்தில் அனைத்து ஆண்களையும் படுகொலை செய்தனர். 1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக செருமனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது. 1943 – சயாம் மரண இரயில்பாதை (பர்மா-தாய்லாந்து தொடருந்து சேவை) ஆரம்பிக்கப்பட்டது. 1956 – முதலாவது வணிகநோக்கு அணுக்கரு உலையை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி இங்கிலாந்து, செலாஃபீல்டு என்ற இடத்தில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். 1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1965 – நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர். 1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர். 1970 – மொண்ட்ரியால்: கியூபெக் மாநிலத்தின் முன்னாள் தொழிற்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான பியேர் லாப்போர்ட்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1973 – எகிப்துக்கு எதிராக இசுரேல் நடத்திய போரில் இசுரேலுக்கு உதவிய மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஓப்பெக் அமைத்து எண்ணெய்த் தடையை அறிவித்தது.
1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 1989 – சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 6.9 M w நிலநடுக்கம் தாக்கியதில் 63 பேர் உயிரிழந்தனர். 1989 – அமைதிப் புரட்சி: கிழக்கு செருமனியின் அரசுத்தலைவர் எரிக் ஒனெக்கரை செருமன் சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற கட்சியின் உயர்பீடம் முடிவு செய்தது. 1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது. 1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர். 2001 – இசுரேலின் சுற்றுலாத்துறை அமைச்சர் ர்டெகாவாம் சீவி தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி என்ற பெயரைப் பெற்றது. 2006 – ஈழப்போர் : புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
பிறப்புகள் 1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898 ) 1820 – ஏதவார்து உரோச்சே , பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1883 ) 1887 – எவுப்ராசியம்மா எலுவத்திங்கல் , இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1952 ) 1892 – ஆர். கே. சண்முகம் செட்டியார் , இந்தியப் பொருளாதார அறிஞர் (இ. 1953 ) 1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981 ) 1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978 ) 1913 – பூரணி , தமிழக எழுத்தாளர் (இ. 2013 ) 1915 – ஆர்தர் மில்லர் , அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005 ) 1919 – ஈசாக் கலாத்னிகோவ் , உக்ரைனிய-உருசிய இயற்பியலாளர் 1931 – எஸ். சி. ஜமீர் , இந்திய அரசியல்வாதி, மகாராட்டிரா ஆளுநர் 1940 – சுவ்ரா முகர்ஜி , இந்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015 ) 1947 – பிருந்தா காரத் , இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி 1948 – ராபர்ட் ஜோர்டான் , அமெரிக்க எழுத்தாளர், சிப்பாய் (இ. 2007 ) 1952 – ஜானு பருவா, இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் 1959 – அமீனா குரிப் , மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர் 1965 – அரவிந்த டி சில்வா , இலங்கைத் துடுப்பாளர் 1970 – அனில் கும்ப்ளே , இந்தியத் துடுப்பாளர் 1972 – எமினெம் , அமெரிக்க ராப் இசைக்கலைஞர் 1983 – பெலிசிட்டி ஜோன்ஸ் , ஆங்கிலேய நடிகை 1992 – பிரணிதா சுபாஷ் , தென்னிந்தியத் திரைப்பட நடிகை 1992 – கீர்த்தி சுரேஷ் , தெனிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள் 532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) 1690 – மார்கரெட் மரி அலக்கோக் , பிரான்சிய புனிதர், அருட் சகோதரி (பி. 1647 ) 1849 – பிரடெரிக் சொப்பின் , போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810 ) 1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824 ) 1920 – ஜான் ரீட் , அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887 ) 1941 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (பி. 1865 ) 1981 – கண்ணதாசன் , தமிழகக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் (பி. 1927 ) 2013 – சரோஜினி வரதப்பன் , தமிழக சமூக சேவகி, எழுத்தாளர் (பி. 1921 ) 2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943 ) சிறப்பு நாள் உலக வறுமை ஒழிப்பு நாள்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews