உலக வரலாற்றில் இன்று ( 17.09.2018 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 17, 2018

Comments:0

உலக வரலாற்றில் இன்று ( 17.09.2018 )


செப்டம்பர் 17 ( September 17 )
கிரிகோரியன் ஆண்டின் 260 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.
1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.
1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.
1630 – மசாசுசெட்ஸ் , பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.
1631 – முப்பதாண்டுப் போர் : சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.
1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு
பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.
1795 – மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை
ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.
1809 – பின்லாந்து போரில்
சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.
1849 – அமெரிக்க செயற்பாட்டாளர்
ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.
1858 – இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும்
தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன. [1]
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
மேரிலாந்தில்
கூட்டமைப்பினருக்கும்
அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895) : யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.
1908 – ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.
1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.
1930 – குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்:
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.
1939 – இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்:
சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
1941 – ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு : சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.
1944 – மார்க்கெட் கார்டன் நடவடிக்கை : நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.
1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.
1948 – ஐதராபாத் நிசாம் மரபினர்
ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
1949 – டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
1965 – பாக்கித்தானுக்கும்
இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1974 – வங்காளதேசம் , கிரெனடா ,
கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.
1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.
1978 – இசுரேலுக்கும்
எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில்
பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.
1988 – தென் கொரியாவின்
சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.
1991 – எசுத்தோனியா , வட கொரியா, தென் கொரியா ,
லாத்வியா, லித்துவேனியா,
மார்சல் தீவுகள்
மைக்குரோனீசியா ஆகியன
ஐநாவில் இணைந்தன.
1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01)
இணையத்தில் கிடைத்தது.
1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2004 – இந்தியாவில் தமிழ்
செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
2011 – வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.

பிறப்புகள்
1764 – ஜான் குட்ரிக் , ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786 )
1826 – பேர்னாட் ரீமன் , செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1866 )
1857 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (இ. 1935 )
1864 – அனகாரிக தர்மபால, 1933), இலங்கை பௌத்த அறிஞர் (இ. 1933 )
1879 – ஈ. வெ. இராமசாமி , இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973 )
1889 – வ. ரா. , தமிழக எழுத்தாளர்
1895 – வெ. சாமிநாத சர்மா , தமிழறிஞர் (இ. 1978 )
1897 – வில்லியம் கொபல்லாவ , இலங்கையின் ஆளுநர், முதலாவது
சனாதிபதி (இ. 1981 )
1906 – ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 2வது
அரசுத்தலைவர் (இ. 1996 )
1913 – யூகின் ஓடம் , அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (இ.
2002 )
1915 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (இ. 2011 )
1930 – லால்குடி ஜெயராமன் , இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013 )
1939 – மேரி சாந்தி தைரியம், மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி
1944 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், இத்தாலிய மலையேறி
1950 – நரேந்திர மோதி , இந்தியாவின் 15வது பிரதமர்
1953 – கி. பி. அரவிந்தன் , ஈழத்து எழுத்தாளர், கவிஞர், (இ. 2015 )
1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் , கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவர்
1965 – பிறையன் சிங்கர், அமெரிக்க இயக்குநர்
1986 – ரவிச்சந்திரன் அசுவின் , இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்
1179 – பிங்கெனின் ஹில்டெகார்ட் , செருமானியப் புனிதர் (பி. 1098 )
1621 – ராபர்ட் பெல்லார்மின் , இத்தாலியப் புனிதர் (பி. 1542 )
1911 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க சிற்பி (பி. 1844 )
1933 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861 )
1959 – கு. வன்னியசிங்கம் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911 )
1953 – திரு வி. க. , தமிழறிஞர் (பி.
1883 )
1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907 )
1994 – கார்ல் பொப்பர் , ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி.
1902 )
2013 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1913 )

சிறப்பு நாள்
ஆத்திரேலியக் குடியுரிமை நாள்
ஆசிரியர் நாள் ( ஒண்டுராசு )


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews