ஜே.இ.இ.,அட்வான்ஸ்டு முடிவு வெளியீடு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவக்கம்
JEE Advanced Results: The results for the JEE Advanced exams, required for admission to IITs, were released on June 1st.
Counseling Begins: The JoSAA counseling process for student admissions began on June 2nd.
Seat Allotment: The first round of seat allotment results is scheduled for June 13th.
Duration: The counseling process will take place in six rounds until July 21st.
சேலம், ஜூன் 2-
ஐ.ஐ.டி.,களில் சேர்வ தற்கான, ஜே.இ.இ., அட் வான்ஸ்டு தேர்வுக்கான முடிவுகள், நேற்று வெளி யிடப்பட்டன. மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மத்திய அரசு தொழில் நுட்ப கல்வி நிறுவ 5, 8.8.4. என்.ஐ.டி., உள்ளிட்டவற் றில், பி.டெக்., –பி.ஆர்க்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு ஜன வரி, ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டமாக ஜே.இ.இ., மெயின் தேர்வு நடத்தப்பட்டன. இதில் பங் கேற்ற, 13 லட்சத்துக்கும் மேற்பட்டோரில், 2.5 லட் சம் பேர் ஜே.இ.இ., அட் வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த 17ல், நடந்த அட்வான்ஸ்டு தேர் வில், 1.79 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியி டப்பட்டன. மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக் கான ஜோஸா கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. தகுதி பெற்ற மாணவ, மாணவி யர், இன்று முதல் தாங்கள் படிக்க விரும்பும் கல்வி நிறுவன படிப்புகளை தேர்வு செய்து, வரிசைப் படுத்தலாம்.
ஜூன் 13ல், முதல் சுற்று இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள் ளது. ஆறு சுற்றுகளாக ஜூலை, 21 வரை கவுன்சி லிங் நடைபெற உள்ளது. இதன் மூலம், 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., மற்றும் மத் திய அரசு நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப் பட உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.