கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, தாலுகா அலுவலகங்களில் நாளை ஆர்ப்பாட்டம் பெறுகிறது. நடை தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் வெளியிட் டுள்ள அறிக்கை:
2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உறுதி அளித் தபடி, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதிப் பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றில் பல ஆண்டு களாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி வரு கிற 16ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அன்று மாலை அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவ லகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநில அளவில் கோரிக்கை விளக்கப் பிரச் சாரம் நடைபெறுகிறது.
நவ. 18ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தமும், இதன் பிறகு காலவரை யற்ற வேலை நிறுத்தமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.