ஆசிரியர்களுக்கு உடல்நலப் பரிசோதனை - பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، فبراير 21، 2025

Comments:0

ஆசிரியர்களுக்கு உடல்நலப் பரிசோதனை - பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.



ஆசிரியர்களுக்கு உடல்நலப் பரிசோதனை - 50 வயதிற்கு மேற்பட்ட ஆரிசியர்கள் பங்கு பெறலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளது.

ஆசிரியர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆசிரியர்கள் ஆரோக்கியமாகவும், மாணவர்களுக்கு திறம்பட பாடம் சொல்லி கொடுக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முதற்கட்டமாக இந்த திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆரிசியர்கள் மட்டும் பங்கு பெறலாம். எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படும்?

இந்த திட்டத்திற்காக கணிசமான பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 1.50 லட்சம் என மொத்தமாக 38 மாவட்டங்களுக்கு ரூ. 57 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பெறப்படுகிறது. இந்த நிதி ஆதரவு வருங்கால இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் நலனுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் எதிர்கால சந்ததியினரை வடிவமைப்பதில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்கை அங்கீகரிக்கிறது.

மார்ச் 1, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், முதலில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் விரிவான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இது சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.

ஒவ்வொரு மாவட்டமும் தகுதியான 150 ஆசிரியர்களை வயது மூப்பு அடிப்படையில் அடையாளம் கண்டு இந்த அத்தியாவசிய சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தில் 16 மருத்துவப் பரிசோதனைகள் உள்ளன, இது மேமோகிராம்கள் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (ECGs) போன்ற முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கியது, இது ஆசிரியர்களின் ஆரோக்கிய நிலையை முழுமையாக மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செயல்முறையை எளிதாக்க தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து விண்ணப்பங்களையும் சரியான முறையில் பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மார்ச் 7-ஆம் தேதிக்குள் இறுதி செய்வார்கள்.

இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், சம்பத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சரியான நேரத்தில் அறிவிப்புகள் கிடைக்கும். இம்முயற்சி ஆசிரியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் கல்விச் சூழலை மேம்படுத்துவதில் அரசின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة