குறும்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சென்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، نوفمبر 04، 2023

Comments:0

குறும்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சென்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி

குறும்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பானுக்கு சென்ற திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினாவிடை சார்ந்த போட்டிகள், பள்ளி, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில அளவில் இறுதி போட்டியில் பங்கேற்றார்.


பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதல் இடம் கிடைத்தது.

முன்னதாக கல்விச் சுற்றுலாவாக மாணவியை அமெரிக்கா அழைத்துச் செல்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக பாஸ்போர்ட், விசா தயாரானபோதும், பள்ளி கல்வித்துறை தாமதத்தால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனா நேற்று ஜப்பானுக்கு புறப்படுகிறார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة