Cooperative Society Assistant Vacancy - கூட்டுறவு சங்க உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் வருகிற 1-ந் தேதி கடைசிநாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 20, 2023

Comments:0

Cooperative Society Assistant Vacancy - கூட்டுறவு சங்க உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் வருகிற 1-ந் தேதி கடைசிநாள்

கூட்டுறவு சங்க உதவியாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் வருகிற 1-ந் தேதி கடைசிநாள் Last date to apply for Cooperative Society Assistant Vacancy is 1st

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங் கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்ப னைச்சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங் களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு வருகிற 1-ந்தேதி வரை www.drbslm.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் மாதம் 24-ந்தேதி நடக்கிறது. இதற்கு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்கவேண்டும். முதுநிலைவாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்க லைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட் டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் உள்ளவர்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப் படும், கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி, தபால் வழி மற்றும் பகுதி நேர கூட் டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்து உள்ளவர் களும், உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கு அதிக பட்ச வயது உச்ச வரம்பு 32. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட் டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த தகவல் கூட்டுறவு சங்கஇணைப்பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் 2,257 உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு அறிவிப்பு*

கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 2,257 உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு டிச. 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிக்கையை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இதையும் படிக்க | Co-operative Department - காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு - மாவட்ட வாரியாக காலிப்பணியிட விவரம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2023 தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கிப் பணியாளா் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளா் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2,257 உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக உள்ளன. அரியலூா் - 28, செங்கல்பட்டு - 73, கோவை - 110, திண்டுக்கல் - 67, ஈரோடு - 73, காஞ்சிபுரம் - 43, கள்ளக்குறிச்சி - 35, கன்னியாகுமரி - 35, கரூா் - 37, கிருஷ்ணகிரி - 58, மயிலாடுதுறை - 26, நாகப்பட்டினம் - 8, நீலகிரி - 88, ராமநாதபுரம் - 112, சேலம் - 140, சிவகங்கை - 28, திருப்பத்தூா் - 48, திருவாரூா் - 75, தூத்துக்குடி - 65, திருநெல்வேலி - 65, திருப்பூா் - 81, திருவள்ளூா் - 74, திருச்சி - 99, ராணிப்பேட்டை - 33. தஞ்சாவூா் - 90, திருவண்ணாமலை - 76, கடலூா் - 75, பெரம்பலூா் - 10, வேலூா் - 40, வேலூா் - 40, விருதுநகா் - 45, தருமபுரி - 28, மதுரை - 75, நாமக்கல் - 77, புதுக்கோட்டை - 60, தென்காசி - 41, தேனி - 48, விழுப்புரம் - 47 என மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளன.

காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க, இளநிலை பட்டப் படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணிபுரிந்தவா்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவுப் பயிற்சியைப் பொருத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயா் மேலாண்மை பயிற்சி முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

18 வயது முதல் 32 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப சம்பளம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தோ்வு செய்யப்படும் முறை: காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுவா். டிச. 24-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடத்தப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிச. 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DOWNLOAD Notification PDF CLICK HERE

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews