ஆசிரியர்கள் சம்பள பிரச்னை; கமிஷனரிடம் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 08، 2023

Comments:0

ஆசிரியர்கள் சம்பள பிரச்னை; கமிஷனரிடம் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் சம்பள பிரச்னை; கமிஷனரிடம் வலியுறுத்தல்

'மதுரையில் மாநகராட்சி ஆசிரியர்களுக்கு தவறான கணக்கீடால் சம்பளம் குறைவாக வழங்கப்பட்டுள்ள பிரச்னைக்கு மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்கிற்கு அனுப்பிய மனு: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களின் வங்கி கணக்கை சரிபார்த்தபோது மார்ச் சம்பளம் பல்வேறு பிடித்தங்களில் தவறான முறையில் பிடித்தம் செய்யப்பட்டு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்விப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை மீண்டும் பெற்றுத்தரவும், கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة