கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أبريل 09، 2023

Comments:0

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டுக் கான கலைஞர் எழுதுகோல் விருது வழங் கப்பட உள்ளது. விண்ணப்பதாரர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழி யல் துறையில் குறைந்தபட்சம் 10ஆண்டுக ளாகத் தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருப்பவ ராகவும், இதழியல் துறையில் சமூக மேம் பாட்டுக்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பெண்களின் முன் னேற்றத்துக்காகவும் பங்காற்றியவராக இருக்கவேண்டும். நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்து ரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற் கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர் வுக்குழுவின் முடிவு இறுதியாக இருக்கும்.

இந்த விருதுடன், ரூ. 5 லட்சமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களது விவரங் கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களு டன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க லாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة