Neet 2022: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... 18 லட்சம் பேர் எழுதுகின்றனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 17, 2022

Comments:0

Neet 2022: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு... 18 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு நாடு முழுவதும் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில், 10 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களை சோதிப்பதற்கான இடங்கள், சமூக இடைவெளி விட்டு நிற்க குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.

தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டின் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் வண்ண புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும் ஒன்றாம் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்.

மாணவர்களின் கையெழுத்து அனுமதி சீட்டின் பக்கம் இரண்டில் புகைப்படத்தின் மீது இடதுபக்கம் இருக்க வேண்டும். பெற்றோரின் கையெழுத்து அனுமதிச் சீட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாணவருக்கும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து சேர வேண்டும். மதியம் 1.30 மணிக்கு மேல் நுழைவாயில் மூடப்படும். மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வு எழுதி முடித்த பின், ஓ.எம்.ஆர் காகிதத்தை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே வெளியே கொண்டுவர வேண்டும்.

தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது. தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரண்டு முறை attendance படிவத்தில் நேரம் குறிபிட்டு கையெழுத்திட வேண்டும். இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் கொடுக்கவில்லை என கருதப்படும்..

மாணவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள், அனுமதி சீட்டு, வைத்திருக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews