அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தற்காலிக பணிநீக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 11، 2022

Comments:0

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை தற்காலிக பணிநீக்கம்!

*விழுப்புரம் மாவட்டம், தென்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்து வரும்*

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவ,* *மாணவியர்களுக்கு நான்கு ஆண்டுகளாக (போஸ்ட் மெட்ரீக் மற்றும் ப்ரீ மெட்ரிக்) கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என பள்ளி மாணவ,* *மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்*

*திரு.த.மோகன்,இ.ஆ.ப., அவர்களை சந்தித்து புகார் தெரிவித்தனர்.* *அதன் அடிப்படையில் மாவட்ட* *ஆட்சித்தலைவர் அவர்களின்* *உத்தரவிற்கிணங்க மாவட்ட*

*முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கிருஷ்ணப்பிரியா அவர்கள் மேற்கண்ட பள்ளியினை ஆய்வு செய்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காதது கண்டறியப்பட்டு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.எம்.ஸ்ரீரங்கநாச்சியார் என்பவர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் திரு.சுந்தரமௌலி என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.*

*மேலும், மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை ஏதேனும் பெற்று வழங்கப்படவில்லை எனில் சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மாணவ, மாணவியர்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட* *தலைமை ஆசிரியர், இளநிலை உதவியாளர் என இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.*

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة