வாக்குகள் எண்ணும் பணி: நாளை (பிப்ரவரி 22) பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، فبراير 21، 2022

Comments:0

வாக்குகள் எண்ணும் பணி: நாளை (பிப்ரவரி 22) பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதில்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைப்பற்றி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி:

இதையும் படிக்க | மத்திய கல்வி அமைச்சக கருத்தரங்கில் பிரதமர் மோடியின் உரை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணும் மையங்களில் பெரும்பாலும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பள்ளிகளில் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 22ஆம் தேதி பள்ளிகள் முழுமையான அளவில் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா.


இதையும் படிக்க | 2000 இந்திய மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் 99 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة