தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 08, 2021

Comments:0

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நாளை 9.11.2021 அன்று காலை 10 மணி அளவில் ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது. நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை CEO செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - திருவண்ணாமலை மாவட்டம்-பள்ளிக்கல்வி -குழந்தைகள் தினவிழா -நவம்பர் 14ம் தினத்தன்று அனைத்து பள்ளிகளிளும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலை நிகழ்ச்சிகள், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்துதல் -சார்பாக.

சென்னை - 05, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.014842/ஜெ2/2021, நாள். 28.10.2021.

பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் எதிர்வரும் 2021, நவம்பர்-14ம் தேதி அன்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் மாணவ / மாணவிகளுக்கு மனஅழுத்தத்தை போக்கும் பொருட்டும், மீண்டும் எழுச்சி பெற்று ஊக்கத்துடன் தனது கல்வியை தொடங்குவதற்கும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்தவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பிள்பற்றி பள்ளிகளில் வருகின்ற நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று பல்வேறு நிகழ்சிகளை நடத்தி அதன் மூலம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற நவம்பர் 14 ம் தினத்தை ஒரு சிறப்பு நேர்வாக கொண்டு குழந்தைகளிடையே ஒரு சிறந்த எழுச்சியை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். எனவே மேற்படி நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் விவரங்களை நவம்பர் மாதம் 25ஆம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews