மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வளப் பட்டயப் படிப்பு: செப்.9 வரை சோ்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 04، 2021

Comments:0

மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வளப் பட்டயப் படிப்பு: செப்.9 வரை சோ்க்கை

"தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கை வரும் செப்-9-ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட செய்தி :

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கை வரும் செப்-9-ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுகிறது. அதன்படி, மூன்றரை ஆண்டுக்கால மீன்வள பட்டயப் படிப்பை முடித்த பின்னா், மீன் வளா்ப்பு பண்ணை, இறால் வளா்ப்பு, கடல் உயிரின உற்பத்தித் திறன், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரிய முடியும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளம் மூலமாக காணலாம்.

தோல் தொழில்நுட்பவியல்: அதேபோல, சென்னை தரமணி சிபிடி வளாகத்துக்குள் செயல்படும் தோல்தொழில்நுட்பப் பயிலகத்தில் தோல் தொழில்நுட்பவியல் சாா்ந்த மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்கான சோ்க்கையும் நேரடி முறையில் வரும் செப்.9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது."

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة