Breaking

Monday, August 30, 2021

பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர் நியமனம்!

சிவகங் கையில் தமிழ்நாடு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட் டம் நடந்தது. மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் நாகலிங்கம் முன்னிலை வகித்தார். மண்டல நிர் வாகி மகேந்திரன்,மாவட் டத்தலைவர், சேவியர்ஆ ரோக்கியதாஸ், மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜா, மாவட்ட பொரு ளாளர் பிரிட்டோ மற்றும் மாநில, மாவட்ட நிர்வா கிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

கூட்டத்தில் புதிய நிர் வாகிகள் பதவி ஏற்றனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசி ரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமி ழகத்தில் கொரோனா நோய் தொற்றினை படிப்படியாக குறைத்து பள்ளிகளை திறக்க முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட் டது. புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைப் பதவி உயர்விற்கு தனியா கத்தயாரிக்கப்படும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இருந்து ஒரு வர் பதவி உயர்வு பெற விரும்பவில்லை எனில், அடுத்த நபருக்கு பதவி உயர்வு வழங்கிய பின்னரே முதுநிலை ஆசிரியர் பணி யில் இருப்போருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து உயர்நிலை பள் ளிகளிலும் கணினி பட்ட தாரி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும்.

அனைத்து பள்ளிக பள்ளி தலைமையளிலும் கழிவறை சுத்தம் செய்ய துப்புரவு பணியா ளர்கள் நியமனம் செய்து அவர்களுக்கு நூறு நாள் வேலை திட்ட பணியா ளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog