சிறப்பு மையம் துவக்கம் - கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

சிறப்பு மையம் துவக்கம் - கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

’பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் டசால்ட் சிஸ்டம்ஸ் எனும் சிறப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள மெக்கானிக்கல் துறையில் டசால்ட் சிஸ்டம்ஸ்-ன் ‘சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்’ திறக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மாணவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த உதவும். இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் உலகளாவிய மற்றும் உள்ளூர் டசால்ட் சிஸ்டம் நிறுவனத்துடன் கலந்துரையாட முடியும். இந்த திட்டம் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ் மற்றும் பாலிமர் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட திட்டங்களை வழங்கும்.

மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவின் அடிப்படையில் இரண்டு அடிப்படை மற்றும் ஐந்து மேம்பட்ட 3டி அனுபவ மென்பொருளில் பயிற்சி அளிக்கப்படும். வேலை வாய்ப்புகள்:3டி டிசைனர், 3டி இன்னோவேட்டர், இன்ஜினியரிங் எக்ஸர்ட், ஸ்டைல் ​​இன்ஜினியரிங், புரொடெக்சன் இன்ஜினியர், புரோக்ராம் மேனேஜர் மற்றும் சிமுலேஷன் இன்ஜினியர் போன்ற 30 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை பெற முடியும். பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, இ.டி.எஸ்., நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews