மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أغسطس 03، 2021

Comments:0

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் (09.08.2021) அன்று காலை 11ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக பேராசிரியர்
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 24 துறைகள் உள்ளன. மேலும் முதுநிலை படிப்பு, எம்.பில் மற்றும் பி எச்.டி போன்ற படிப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளது. 2400 மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வருகின்றனர். மேலும், இங்கு புதிதாக இளநிலை தொழில் கல்வி, உணவு பதப்படுத்துதல் போன்ற புதிய பாடங்களை அறிமுகப்படுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவலால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் (09.08.2021) அன்று காலை 11ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பிஎச். டி கல்வி தகுதி உடையவர்கள் தங்களது சுய விவர குறிப்பு மற்றும் கல்வி தகுதி சான்றிதழ் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் மொழி பாடங்களுக்கு 09.08.2021 அன்று காலை 11.00 மணிக்கும் அறிவியல் பாடங்களுக்கு 08-2021 மற்றும் 11-08-2021 அகிய இரு நாட்களும் காலை 11.00 மணிக்கு அபிஷேகப்பட்டி வளாகத்தில் தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة