மாணவர்களுக்கான அபாகஸ் முகாம்: ஆன்லைனில் 3 நாட்கள் நடைபெறுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 02, 2021

Comments:0

மாணவர்களுக்கான அபாகஸ் முகாம்: ஆன்லைனில் 3 நாட்கள் நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், எஸ்ஐபி அபாகஸ் (SIP abacus) சார்பில் பள்ளி மாணவர்களுக்காக அபாகஸ் முகாம் ஆன்லைனில் இன்று (ஜூலை 2) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைன் வழியாக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், எஸ்ஐபி அபாகஸ் உடன் இணைந்து ஆன்லைன் அபாகஸ் முகாமை இன்று முதல் 3 நாட்கள் நடத்த உள்ளது.
இந்த முகாமில் மாணவர்களின் கவனிக்கும் திறன், கணிதத் திறன், படித்ததை நினைவூட்டுதல், தன்னம்பிக்கை, பார்த்ததை நினைவில்வைத்தல் ஆகிய திறன்களை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தினமும் மாலை 5 முதல் 6 மணிவரை நடைபெறும் இம் முகாமில் 6 முதல் 12 வயது வரையுள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு குழுவும்10 மாணவர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனி கவனம் செலுத்தி, பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். அபாகஸ் பயிற்சியை செயலி (APP) மூலம் கற்றுக்கொள்ள செல்போனும், ZOOM APP வழியாக நேரடியாகப் பங்கேற்க லேப்டாப்பும் இருப்பது அவசியம்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ரூ.294/- பதிவுக் கட்டணம் செலுத்தி https://bit.ly/3y2CKWK என்ற லிங்க்கில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9791605238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews