தேர்தல் பணி - தடுப்பூசி போடும் ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 16، 2021

Comments:0

தேர்தல் பணி - தடுப்பூசி போடும் ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு!

உடுமலை கல்வி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும், 1,714 ஆசிரியர்களில், இதுவரை, 300 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், 737 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1, 2 மற்றும் 3 என, நான்கு பேர் பணியமர்த்தப்படவுள்ளனர்.
சிஏ, சிஎஸ், ஐசிடபிள்யுஏ படிப்புகள்முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை
அவ்வகையில், உடுமலை தொகுதியில், 1,824 பேர்; மடத்துக்குளம் தொகுதியில், 1,714 பேர் என, மொத்தம், 3,538 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உடுமலை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, 1,716 ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
தொற்றை மறைத்து வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் - கலெக்டர் கவனிப்பாரா?
அவ்வகையில், இதுவரை, 300 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால், ஆசிரியர்கள் தங்களது பாதுகாப்பை கருதி, இதனை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. தினமும், தடுப்பூசி போடுவோரின் விவரம் சேகரிக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة