அரசு பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த மாநில அரசு புது முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، فبراير 04، 2021

Comments:0

அரசு பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்த மாநில அரசு புது முயற்சி

மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கட்டாயம் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விளையாட்டு மைதானம் இல்லை என மாநில அரசுக்கு தகவல் கிடைத்தது. மாணவர்களுக்கு கல்வி எப்படி முக்கியமோ அதுபோல் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய விளையாட்டும் மிக முக்கியம் என்றும், 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கண்டிப்பாக விளையாட்டு பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. நகர பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 1 ஏக்கர் நிலமும், புறநகர் பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு 2 ஏக்கரில் விளையாட்டு மைதான நிலமும் இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருத்திருந்தது. ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்காமல் அலட்சியம் காட்டுவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றோலையில் ஒவ்வொரு பள்ளியும் கண்டிப்பாக விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة