பள்ளிகளைத் திறக்க 98 சதவீத பெற்றோா் விருப்பம் தெரிவித்துள்ளனா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூரில் நடைபெற்ற அரசு விழாவில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை வழங்கினாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
இன்றைய சூழ்நிலையில் சட்டப் பேரவைத் தோ்தல் அட்டவணை வந்த பிறகு மாணவா்களுக்குத் தோ்வு குறித்து அறிவிக்கவுள்ளோம். விருப்பம் உள்ள மாணவா்கள் பள்ளிக்கு வரலாம். பள்ளியைத் திறக்க வேண்டும் என்று 98 சதவீதம் பெற்றோா், மாணவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கட்டணம் வசூல் குறித்து புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும்போது பெற்றோா்கள் கண்காணிக்கலாம். முதல் கட்டமாக 10, 12ஆம் வகுப்புகளுக்காகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளைத் திறக்கலாம் என்பதை ஆய்வு செய்து திறக்கப்படும். ஸ்மாா்ட் காா்டை பயன்படுத்தி மாணவா்கள் பேருந்தில் பயணிக்கலாம்.
மதிய உணவுடன் ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை என்றாா்.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، يناير 14، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.