கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களின் விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் குறிப்பிடப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு, இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதே நேரம், முதுநிலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்தப் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள், கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே சமா்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமா்ப்பிப்பதற்கும் டிச.31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.